// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பிரதமர் நரேந்திர மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் ஆளுநர் பதவி ஆகியவை தமக்கு எதிராக கையாளப்படுவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா, சி.பி.ஐ. அமைப்பால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது சம்பவத்தை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

டெல்லி முதலமைச்சர், தெலுங்கானா முதலமைச்சர் , மேற்கு வங்க முதலமைச்சர், பஞ்சாப் முதலமைச்சர் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் ஆகியோர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்