// print_r($new['title']); ?>
day, 00 month 0000

முருகன் உள்ளிட்டோரின் விடுதலையில் இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்தும் முட்டுக்கட்டை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டபோதும், திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலையில் இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்தும் முட்டுக்கட்டை போட்டுவருவதாக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவருக்கும் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்கும் நடவடிக்கையில் இந்திய ஒன்றிய அரசு பின்னடித்து வருகின்றது என்றும், அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காதவிடத்து தம்மால் கடவுச்சீட்டு வழங்கமுடியாது என்று இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக இலங்கைத் தூதரகத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்தமனு நேற்றுமுன்தினம் மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் பங்கேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் முருகன், ரொபேர்ட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை திருச்சியில் இருந்து அழைத்துச் சென்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நீதிமன்றில் தெரிவித்தார். 

சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மூவரிடமும் நேர்முக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்று முருகனின் வழங்கறிஞர் புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவருக்கும் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்கும் நடவடிக் கையில் இந்திய ஒன்றிய அரசு பின்னடித்து வருகின்றது என்றும், அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத விடத்து தம்மால் கடவுச்சீட்டு வழங்கமுடியாது என்று இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமுக்குத்திரும்பியதன் பிற்பாடு சிறைத்துறை அதிகாரிகள் ஊடாக சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வேண்டுகைக் கடிதத்தை அனுப்பிவைத்தால் அதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கை அனுப்புவதில் இந்திய ஒன்றிய அரசு இழுத்தடித்து வந்தநிலையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன், அவரது பூர்வீக இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்