day, 00 month 0000

பயங்கரவாத தடைச்ச சட்டத்தில் உள்ள முக்கிய விடயங்கள் அகற்றப்படும் – அமைச்சர் உறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தில், அரசியல் நோக்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சர் அல்லது ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஒருவரை தடுத்து வைப்பதற்கான அதிகாரம் இல்லாது ஒழிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சட்டத்தின் கீழ் பொலிஸாரோ அல்லது வேறு தரப்பினரோ சட்டத்தை தவறாக பயன்படுத்த அல்லது சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் செயற்படவோ இடமளிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தடுப்புக்காவல் உத்தரவின் பிரகாரம் ஒருவரை நீண்டகாலம் தடுத்துவைக்கும் வாய்ப்பும், வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறையும் மாற்றி அமைக்கப்படும் என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேநபர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களின் விளைவாகவே அவர்கள் வாக்குமூலம் வழங்குவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்