day, 00 month 0000

அண்ணன் தோன்றட்டும் பேசுவோம்

பிரபாகரன் விவகாரத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கு பதில் இல்லை. ஆனால், இதுகுறித்து என்னிடம் ஒருசில கேள்விகள் மட்டுமே உள்ளது. என் தம்பி பாலசந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் தப்பி போயிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று சொன்னவர், வீரமாக நின்று சண்டையிட்டவர். தன் உயிரை மட்டும் தற்காத்து கொண்டு தப்பி ஓடுபவர் எங்கள் அண்ணன் கோழை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 15 ஆண்டுகள் போர் முடிந்து ஒரு பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு, பத்திரமாக பதுங்கி இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இரண்டாவது சொல்லிட்டு வருபவர் எங்கள் அண்ணன் கிடையாது. வந்துட்டுதான் சொல்வார். அவர்களை அறிந்தவர்கள் இதை நன்கு அறிவார்கள். சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு சொல்லி கொடுத்தவர் எங்கள் தலைவர் அவர்கள்.

அதனால் தேவையற்றதை கூறி குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சரி மக்கள் முன்னாடி தோன்றுவார் என்று சொல்லுகிறார்கள். சரி அவர் தோன்றட்டும் பேசுவோம் எனத் தெரிவித்துள்ளார்.  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்