day, 00 month 0000

13 ரணில் விரித்த பொறி, அந்த வலையில் விழ வேண்டாம் – அனுர

13வது திருத்தச் சட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்த பொறி என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி அமுல்படுத்த மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அதிகாரத்தை பாதுகாக்க மட்டுமே ஜனாதிபதி விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி எப்பொழுதும் இவ்வாறான விளையாட்டுக்களை விளையாடுவதாகவும், இந்த வலையில் விழ வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்