day, 00 month 0000

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை நிகழ்வை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வினை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான தரப்பினரும் விமல் வீரவன்ச தரப்பினரும் இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.

இதேவேளை இன்றைய சம்பிரதாய நிகழ்வில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்