day, 00 month 0000

மார்ச் 31 இற்கு இடையில் முடிவு கிடைக்காவிடில் நாடு மோசமடையும்

சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதற்கமைய மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு குறித்த காலப்பகுதியில் கடனை பெற்றுக்கொள்ள தவறும் பட்சத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்