day, 00 month 0000

கொழும்பில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் மீண்டும் இணைந்த ரணில்-கோத்தா

கொழும்பு - ஹுனுப்பிட்டிய கங்காராம ஆலயத்தின் ஒன்பதாவது மஹா பெரஹரா வீதி உலா நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் மங்கள ஹஸ்திராஜயவின் மீது புனித கலசத்தை இணைந்து வைத்துள்ளனர்.

கொழும்பு புதிய கோறளை ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கல்பொட ஞானிஸ்ஸர தேரரின் ஆலோசனையின் பிரகாரம் ஆலயத்தின் தலைவர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் பிரதம அமைப்பின் கீழ் பெரஹரா நடவடிக்கைகள் இடம்பெற்றன. 

கங்காராம நவம் பெரஹரா நாளையும் வீதி உலா வரவுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்