day, 00 month 0000

காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு!

உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கும் வர்த்தமானி மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி, காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சை வேட்பாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தொடர்பான வர்த்தமானி யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரினால் வெளியிடப்படவில்லை என அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்