day, 00 month 0000

13வது திருத்தத்தை அமுல்படுத்த முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு குறித்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அனைத்து மாகாண சபைகளும் செயலிழந்துள்ள பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.

இவ்வாறு அர்த்தமற்ற அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அவர் அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.

அதிகரித்துவரும் நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிதிப் பற்றாக்குறை என கூறி உள்ளூராட்சித் தேர்தலை தள்ளிப்போடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்