day, 00 month 0000

கொழும்பில் தம்பதிகளால் பணம் நகைகளை இழந்த பலர்; இரவில் செல்பவர்கள் அவதானம்

கொழும்பில் மனைவியை விபச்சாரியாக காண்பித்து, பல்வேறு நபர்களை ஏமாற்றி பாழடைந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று கொள்ளையில் ஈடுபட்டுவந்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு துணை புரிந்த மனைவி மற்றும் ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கச்சங்கிலியொன்றும், தொலைபேசியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவுவேளையில் எகொட – உயன பிரதான வீதிக்கு அருகில் மனைவியை நிறுத்தி , அவரை நாடும் நபர்களுடன் மனைவி, பாழடைந்த இடத்துக்கு சென்ற பின்னர், அங்கு வைத்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் கணவன் ,மனைவி மற்றும் நண்பன் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்