// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஜனநாயக போராளிகள் கட்சி இந்தியா பயணமாகிறது

ஜனநாயக போராளிகள் கட்சி இன்று இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதிப் பகுதியில் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனநாயக போராளிகள் கட்சியினர் நாடு திரும்பியிருந்த நிலையில் உள்ளூராட்சி தேர்தலிலும் பங்கேற்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக உள்ளூராட்சி தேர்தலிலும் ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கியுள்ளது.

இச் சூழலில் மீண்டும் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜனநாயக போராளிகள் கட்சி பிரதிநிதிகள், அரசியல் உயர்மட்டங்களையும் சந்தித்து வடக்கு கிழக்கு அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் என நம்பப்படுகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்