யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவுசெய்வதற்கான அமர்வு இன்று (19) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில் முதல்வர் தெரிவிற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் சபை நடாத்துவதற்குரிய கோரம் இன்மையால் இன்றைய சபை அமர்வு ஒத்திவைக்கப்படுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அதேவேளை இன்றைய கூட்டம் போன்று பின்னரும் இரண்டு கூட்டம் நடத்தலாம் எனவும் அத்தோடு இன்றைய தினத்திலிருந்து 14 நாட்களிற்குள் அடுத்த கூட்டத்தினை நடத்த வேண்டும். அதுவும் இதனை போன்ற தெரிவாக தான் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.