தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த 10ஆம் திகதி நடத்திய பேச்சுவார்த்தையில், 7 நாட்கள் கால அவகாசம் வழங்கி இருந்தன.
அதிகாரப்பகிர்வு, காணி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய விடயங்களில் இந்த 7 நாட்களுக்குள் அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும்.
அல்லாவிடில் அரசுடனான பேச்சுவார்த்தையை தொடர்வதில்லை என தமிழ்க் கட்சிகள் அறிவித்திருந்தன.
அந்த காலக்கெடு இன்றுடன் (17) நிறைவடையும் நிலையில், ஜனாதிபதியிடமிருந்து தமிழ் கட்சிகளுக்கு சாதகமான பதிலெதுவும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.