day, 00 month 0000

முக்கிய தகவல்களை அம்பலப்படுத்த தயாராகும் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முக்கிய தகவல்கள் சிவற்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போது, தகவல்கள் முன்கூட்டியே வெளியாகியிருந்த போதும் அதனை தடுக்கத் தவறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வாறான சூழலிலேயே இந்த விடயம் தொடர்பில் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் அவர் விசேட தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்