முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.
அவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு சுற்றுலா வீசா மூலம் செல்லும் திட்டத்தில் இருந்தார்.
எனினும் அவருக்கு சுற்றுலா வீசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் அமெரிக்க பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அது பலனளிக்காத பட்சத்தில் அடுத்த வாரமளவில் அவர் மீண்டும் இலங்கைத் திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன