day, 00 month 0000

"தமிழர்களது உரிமைகளை பறித்து வழங்கப்பட்டதே இலங்கைக்கான சுதந்திரம்"

தமிழர்களது சுதந்திரத்தையும் அவர்களின் இறைமையையும் பறித்து இலங்கையில் தமிழர்களது உரிமைகளையும் சேர்த்து பிரித்தானிய அரசால் வழங்கப்பட்டதே இலங்கைக்கான சுதந்திரம் என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும், “சமஸ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டுமெனவும் அது இலங்கையில் தமிழ் சிங்கள மக்களை பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் தந்தை செல்வா 1948ஆம் ஆண்டிலே விடுதலைக்கான ஓர் பயணத்தை ஆரம்பித்தார்.” என தெரிவித்திருந்தார்.

இதற்கமைய குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டு உரையாற்றுகையில், தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேசம் மற்றும் இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கின்ற போதும் தமிழர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் தமிழர்கள் ஆட்சி செய்த நிலங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை அது சிங்களவர்களுக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்கள் சுதந்திர தமிழர்களாக இருக்க வேண்டும் என்றும் அதற்காகவே கடந்த 1948ஆம் ஆண்டிலேயே தந்தை செல்வா தனது அஹிம்சை வழியிலான போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இனப்பிரச்சினை இலங்கையில் தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் கட்சி சிதைந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்துக்கு சென்று பிரதமராகி, அதிபராகி இருக்கின்றார்.

இந்த நிலையில் பேச்சு வார்த்தை மூலம் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அழைத்திருக்கின்றார். தமிழ் மக்களுடைய விடுதலையை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து பேச வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்