day, 00 month 0000

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நேர்மையுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கின்றோம்; அரசாங்கம் அறிவிப்பு

நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே நாங்கள் சகல அரசியல் கட்சிகளுடனும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கின்றோம்.

அரசியல் தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே இந்த செயற்பாட்டை நாங்கள் முன்னெடுக்கின்றோம் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், இனப்பிரச்சினை தீர்வுசெயற்பாட்டில் இந்தியாவின் கரிசனையை நாங்கள் புறக்கணிக்க முடியாது. இந்தியாவின் கரிசனையை குறைத்து மதிப்பிட முடியாது.

இந்த விடயத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை செவ்வாய்க்கிழமை சகல அரசியல்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

பேச்சுவார்த்தையில் சகல அரசியல் கட்சிகளுக்கும்  பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்