// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணி வெளியேறி அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி மொராக்கோவிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை சாமர்த்தியமாக எதிர்கொண்ட மொராக்கோ, கோல் எதுவும் பதிவு செய்து விடாமல் தடுப்பாட்டத்தில் கவனம் வைத்தது.

சுவிட்சர்லாந்து அணிக்கு 6 கோல் பரிசளித்த போர்ச்சுகல் அணியில், இந்த முறையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்படாமல், 51வது நிமிடத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

ஆனால் அதன் பின்னர் ஆட்டத்தில் தம்மை முன்னிலைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது. 

போர்ச்சுகல் அணியின் தோல்வி காரணமாக நட்சத்திர வீரர் ரொனால்டோவின் உலகக்கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து களத்தில் இருந்து கண்ணீருடன் ரொனால்டோ வெளியேறினார்.

37 வயதாகும் ரொனால்டோ அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், ஜாம்பவான் வீரர் ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு கானல் நீராக முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்