day, 00 month 0000

தேர்தலுக்கு தயார்; பசில் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் எவரும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று பொதுஜன பெரமுனவின் ஊடக மையத்தில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை 100 வீதம் நிறைவேற்ற முடியாமல் போனமை தொடர்பில் வருந்துவதாகவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலுக்கான நேரம் வந்துவிட்டதாகவும், எந்தத் தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்துக்கு தன்னால் மீண்டும் வரமுடியாது போனதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்