day, 00 month 0000

UBDATE- மைத்திரிக்கு எதிரான வழக்கு 10 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு 10 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி ரீட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன் போது முன்னாள் ஜனாபதில் சிறிசேன தாக்கல் செய்த ரீட் மனு மீதான தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

முன்னைய பதிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) காலை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகைதந்தார்.

மேலும், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நீதிமன்றில் முன்னிலையனார்.

நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படது.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தனிப்பட்ட முறைப்பாடு வழக்கை இன்று (14) முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்