day, 00 month 0000

யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி சைக்கிள் பயணம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி இரு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டி பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியை சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) மற்றும் பாஸ்கரன் சுமித்தன் (வயது 22) ஆகிய இரு இளைஞர்களுமே தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,  எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உடல் ஆரோக்கியத்தை பேண துவிச்சக்கர வண்டி ஓட்டுவது சிறந்ததாகும். அதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்குடனேயே தாம் துவிச்சக்கர வண்டியில் கதிர்காமம் நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்