day, 00 month 0000

பிணங்களின் மேல் நின்று இரத்த ஆற்றில் ஆட்சி செய்ய முயற்சி செய்கிறீர்கள்; அனுர பாய்ச்சல்

பிணங்களின் மேல் நின்று, இரத்த ஆற்றில் ஆட்சி செய்ய நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

நாம் தேர்தலை நடாத்தக் கோருகின்றோம். அப்போது தான் மக்களின் மன நிலை உங்களுக்குத் தெரியும். பிணங்களின் மேல் நின்று, இரத்த ஆற்றில் ஆட்சி செய்ய நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.

நாட்டை வழி நடத்த தெரியாமல் வன்முறை மூலம் மக்களை அடக்கப் பார்க்கிறீர்கள். மக்களின் மனதை வென்று ஆட்சி செய்ய வேண்டும்.

நாளுக்கு நாள் வர்த்தமானி வெளியிடுதல் ,அதை மாற்றுதல், விலைகளை அதிகரித்தல் இதைத் தான் இந்த அரசு செய்கிறது.

நாட்டில் திடமான திட்டம், முறைமை இல்லை. உள்ளூர் உற்பத்தியாளர்களை கைகழுவி விட்டு விட்டு, சீனாவுக்கு இங்கே சந்தை அமைத்துக் கொடுக்கின்றனர்.- என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்