ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இதில் இலங்கை அணி B பிரிவில் போட்டியிடவுள்ளது.
அதற்கமைய தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் பரிந்துரைக்கப்பட்டு, தற்போது விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களின் பின்னர், இடது கை துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா இலங்கை ஒருநாள் அணி குழாமில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இளம் சகல துறை ஆட்டக்காரரான துனித் வெல்லாலகேவும் சேர்க்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பந்துவீச்சார்களான, துஷ்மந்த சமீர, லஹிரு குமார மற்றும் மத்திஷ பத்திரன ஆகியோரும் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.