day, 00 month 0000

கனடாவின் உலகக் கிண்ண கனவை தகர்த்த அவுஸ்திரேலியா

உலகக் கிண்ண மகளிர் கால்பந்தாட்ட போட்டி தொடரில் கனடா தோல்வியை தழுவியுள்ளது.

நியூசிலாந்து மற்றும் அவஸ்த்ரேலியா ஆகிய நாடுகளில் தற்பொழுது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஒலிம்பிக் சாம்பியன்களான கனடிய அணி அவுஸ்திரேலியாவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளது.

நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியா அணி, கனடாவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் ஆரம்பம் முதலே அவுஸ்திரேலியா கனடாவின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக தரவரிசையின் அடிப்படையில் ஏழாம் இடத்தை வகித்து வரும் கனடிய அணி 10-ஆம் இடத்தை வகிக்கும் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது.

இந்தப் போட்டி சமநிலையில் அல்லது வெற்றி கிட்டியிருந்தால்  கனடிய அணி 16 அணிகள் மோதும் சுற்றிற்கு முன்னேறி இருக்கும்.

அவுஸ்திரேலியாவின் அபார திறமைகளினால் இந்தப் போட்டி தொடரில் இருந்து கனடா வெளியேறியுள்ளது.

இது கனடிய ரசிகர்களை பெறும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்