day, 00 month 0000

இந்தோனேஷியாவை வென்றது ஆர்ஜென்டீனா

உலக சம்பியனான ஆர்ஜென்டீனா, இந்தோனேஷியாவுடனான சினேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் 2:0 கோல்கள் விகிதத்தில் வெற்றியீட்டியது.

இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நேற்று திங்கட்கிழமை (19) இப்போட்டி நடைபெற்றது.

ஆர்ஜென்டீனாவின் லியாண்ட்ரோ ப்ரதேஷ், போட்டியின் 38 ஆவது நிமிடத்திலும் கிறிஸ்டியன் ரொமேரோ 55 ஆவது நிமிடத்திலும் கோல் புகுத்தினர்.

  ஆர்ஜென்டீன அணியின் தலைவரும், 7 தடவைகள் பெலோன் டி'ஓர் விருது வென்றவருமான லயனல் மெஸி இப்போட்டியில் பங்குபற்றவில்லை. ஏஞ்சல் டி மரியா, நிக்கலஸ் ஒட்டாமெண்டி ஆகியோரும் இப்போட்டியில் விளையாடவில்லை. இவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

ஆர்ஜென்டீன அணிக்கு ஜேர்மன் பிசேல்லா தலைமை தாங்கினார்.

ஆர்ஜென்டீன, இந்தோனேஷிய சிரேஷ்ட கால்பந்தாட்ட அணிகள் போட்டியொன்றில்  மோதியமை இதுவே முதல் தடவையாகும். 

பீபா தரவரிசையில் ஆர்ஜென்டீனா முதலிடத்திலும் இந்தோனேஷியா 149 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது,  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்