day, 00 month 0000

இந்திய - சீன எல்லைக்கு அருகில் உருவாகி வரும் மெகா நீர்மின் திட்டம்

இந்திய - சீன எல்லைக்கு அருகில் 2.6 டொலர் பில்லியன் செலவில் மெகா நீர்மின் திட்டத்தை ஆரம்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இந்திய அரசு நடத்தும் NHPC லிமிடெட் அஸ்ஸாம் மற்றும் அருஞ்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்லும் சுபன்சிரி லோயர் திட்டத்திற்கான சோதனைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கும் எனவும் அதன் முதல் பிரிவு எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள், எட்டு அலகுகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் தேவையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு விரைவாகப் பதிலளிக்கும் திறனுடன் கூடிய நீர் மின்சாரம், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தின் இடைவிடாத உற்பத்தி அதிகரித்து வருவதால், கட்டத்தை சமநிலைப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

A mega hydropower project

 பெரிய அணைகள் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் உள்ள பகுதிகளில் உள்ளூர் பொருளாதாரங்களை உயர்த்துவதற்கான வழியாக அமைகின்றது.

சுபன்சிரி திட்டம் முடிவுக்கு வரும்போது, NHPC இந்தியா கட்ட திட்டமிட்டுள்ள மிகப்பெரிய நீர்மின் நிலையமான 2.9-ஜிகாவாட் டிபாங் திட்டத்திற்கான கட்டுமான பணிகளை வழங்குவதற்கான திட்டங்களை இறுதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்