day, 00 month 0000

ஒடிசா கோர விபத்து...! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  290 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரயில் நிலையத்திற்கு  அருகே கடந்த  2 ஆம் திகதி  3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து இடம்பெற்றது.

இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்ததுடன்,1 000 ற்கும்  அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில், இந்த ரயில் விபத்தில் படுகாயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த ஒருவர் ஜுன் 13 அன்று உயிரிழந்துள்ள நிலையில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்தது.

மேலும் நேற்றையதினம்(16)  பீகாரை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்  ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இது வரையிலும் 80 ற்கும் அதிகமான  உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்