day, 00 month 0000

மாணவர்களை இலக்குவைத்து வெடிகுண்டு மிரட்டல்..! வவுனியாவில் பரபரப்பு

வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்திற்கு இன்றையதினம் சென்ற இருவர் தம்மை காவல்துறையினர் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்குவைத்து இரண்டு குண்டுதாரிகள் நடமாடித்திரிவதுடன், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர்.

குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் குறித்த விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் கேட்டபோது, காவல்துறையினர் என அடையாளப்படுத்திய இருவர் மேற்குறித்த தகவலை காவலாளியிடம் கூறிச்சென்றதை உறுதிப்படுத்தியிருந்தார்.

எனினும் உத்தியோகபூர்வமாக குறித்த தகவல் வவுனியா காவல்துறையினரால் தனக்கு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தகவல் காரணமாக நகரப் பாடசாலைகளுக்கு முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்