cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

தேசிய தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பு இன்று இல்லை

தேசிய தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை என வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

 “தனது வயது முதிர்வு உடல்நிலையை கருத்தில் கொண்டு இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதிய தலைவர் ஒருவரை தேடுவதாக எனக்கு தெரியவில்லை. அப்படி அவர் செய்வதாக இருந்தால் 2020 நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனே அவர் அதை செய்திருக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரையில் தேசிய தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை. அப்படியிருக்கையில் அதற்கு அவர் புதிய தலைவரை தேடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சரியோ பிழையோ அவரை விடுத்து மற்ற இரு கட்சிகளும் தாங்கள் தான் தலைவர் என்றும் தாங்கள் தான் கூட்டமைப்பு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்றே கூற வேண்டும். அதற்கு ஒரு தலைவரை சம்பந்தன் தேடினால் அது நகைச்சுவையாக தான் முடியும்.

இது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்பதை பற்றி பார்க்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழர்களின் தலைமை என்பதில் நேரடியாக இந்தியாவிற்கு ஒரு கருத்து இருக்கலாம்.

ஆனால் அவ்வாறு ஒருவரை தேடி பிடிக்க கூடிய நிலை இந்தியாவிற்கு இருக்குமா என்பது தெரியாது. அவ்வாறு ஒரு தலைமையை எவ்வாறு தேடி முன் கொண்டுவரலாம் என்பது இந்திய புலனாய்வு ஆய்வுகளுக்கு உட்பட்ட விடயமாகவும் இருக்கலாம்.”என தெரிவித்துள்ளார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்