இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்திய குடியரசு தின விழா நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் இன்று நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்துக்கொண்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.