// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்த யாழ். பல்கலை மாணவர்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட பொங்குதமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை நினைவு கூரும் வகையில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவுநாள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபிக்கு முன்பாக நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது.

பொங்குதமிழ் தொடர்பான நினைவுரை மற்றும் பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவுநாள் ஊடக அறிக்கை வெளியீடு என்பன இடம்பெற்றது.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை,  மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி  சர்வதேச சமூகத்தை தமிழர் தேசத்தின் பால் திரும்பிப் பார்க்கும் வகையில்  யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடனம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பலகையை  அழகுறத் தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டிருந்தது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்