cw2
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு இன்று (15) விஜயம் செய்துள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போராட்ட பேரணி நல்லார் நோக்கி பயணித்தது.
அதன்போதே அரசடி சந்தியில் வைத்து பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்ட காரணத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.