cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

தேசிய பொங்கல் விழா - யாழில் தரையிறங்கிய ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

தேசிய பொங்கல் விழா கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் யாழ். பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அவர் நாகவிகாரைக்குச் சென்று பின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கவை சந்திக்கவுள்ளதுடன், மதியம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கா தேவி மண்டபத்தில் 3 மணியளவில் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்