cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

தனிநபர் உண்ணாவிரத போராட்டம் - ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் மூடப்படும் வர்த்தக சங்கங்கள்

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஒருவர் கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவ மேயர் என்பவர் புதுகுடியிருப்பு நகர் பகுதியில் வீதியோரத்தில் தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புகள் தனி மனிதர்கள் அனைவரும் ஒன்று பட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

அவரை நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சந்தித்து கலந்துரையாடினார்.

இதையடுத்து, இன்றையதினம் குறித்த நபரின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று காலை முதல் 11.00 மணி வரை புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து வர்த்தக சங்கங்களும் மூடப்படவுள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்