// print_r($new['title']); ?>
day, 00 month 0000

உலகத்தின் முடிவு இதுதான் - நாசா வெளியிட்ட பகீர் அறிவித்தல்

அமெரிக்க விண்வெளி ஆராச்சி மையமான நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் - நீண்ட காலமாக அச்சத்தை ஏட்படுத்தக்கூடிய - பூமி கிரகம் தொடர்பான ஒரு முக்கியமான விண்வெளி மர்மத்திற்கானவிடையை கண்டுபிடித்துள்ளனர்.

அதென்ன மர்மம்? அந்த மர்மத்திற்கும் பூமியின் கடைசி நாளிற்கும் என்ன சம்பந்தம்? தொடர்பான விபரங்களே குறித்த மர்மத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இன்றோ, நாளையோ இல்லை என்றாலும் கூட என்றாவது ஒரு நாள், நம் பூமி கிரகத்தின் மீது சந்திர கிரகம் வந்து மோதும் என கூறப்படுகிறது.

அதுவே பூமியின் கடைசி பயங்கரமான நிமிடங்களாக இருக்கும் என்கிற கோட்பாடு ஆனது, இன்றுவரையிலாக நம்பப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என நாசா விஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால் பூமிக்கும், செவ்வாய் கிரகத்தின் அளவுள்ள மற்றொரு சிறிய கிரகத்திற்கும் இடையே நடந்த மோதலின் விளைவாகவே - சந்திரன் உருவானது என்கிற கோட்பாடு இன்றும் முன்மொழியப்படுகிறது.

அந்த கோட்பாடு, ஜெயின்ட்-இம்பாக்ட் தியரி என்று அழைக்கப்படுகிறது. பூமியும், சந்திரனும் மோதுமா? உண்மையில் அப்படி ஒரு விண்வெளி நிகழ்வு நடக்குமா? அதுதான் பூமியின் கடைசி நாளாக இருக்குமா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை வெளிப்படுத்தும் நோக்கத்தின் கீழ் நாசா விஞ்ஞானிகள் - இதுதொடர்பான உண்மை ஒன்றை வெளிப்படுத்தி உள்ளனர்.

நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நமது சூரிய குடும்பமானது அதன் சமநிலைகளுக்கு இடையே, அதாவது கிரங்கங்கள் மற்றும் நிலவுகளுக்கு இடையே சமநிலையை பராமரிக்கிறது.

அந்த சமநிலையானது - சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களும் மற்றும் அவற்றின் நிலவுகளும் ஒன்றுடன் ஒன்று மோதுவதை தடுக்கிறது! இருந்தாலும் கூட, சூரிய குடும்பத்தில் உள்ள சமநிலையின் காரணமாகவும் பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள கிராவிடேஷனல் தொடர்பு காரணமாகவும், அவைகள் ஒன்றோடொன்று மோதுவது நடைமுறையில் சாத்தியமற்றது என்று கூறப்படுகிறது.

இருந்தாலும் கூட, இதுதான் நடக்கும், இப்படித்தான் நடக்கும் என்று எதையுமே 100% உறுதியாக கூறிவிட முடியாது என கூறியுள்ளனர். ஏனென்றால், மற்றொரு அறிவியல் கோட்பாடானது - பூமியும், சந்திரனும் மோதுவதற்கான வாய்ப்புகளை பற்றி விவரிக்கிறது.

பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள கிராவிடேஷனல் தொடர்பில் குறுக்கீடு ஏற்பட்டால் அல்லது மாற்றம் ஏற்பட்டால் அவைகள் (பூமியும், சந்திரனும்) ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம் என கூறியுள்ளனர்.

இது சாத்தியமா என்று கேட்டால் ஆம், சாத்தியம் தான் என தெரிவித்துள்ளனர்.ஒரு மிகப்பெரிய சிறுகோள் அல்லது விண்கல் ஆனது பூமி மற்றும் சந்திர அமைப்புக்கு அருகில் வந்தால், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள கிராவிடேஷனல் தொடர்பு ஆனது சீர்குலையலாம் என கூறப்படுகிறது.

அது ஒரு மோதலுக்கு வழிவகுக்கலாம் என விஞானிகளால் நம்பப்படுகிறது.ஒருவேளை சந்திர கிரகமானது நாம் வாழும் பூமி கிரகத்தின் மீது வந்து விழுந்தால் அல்லது மோதினால் என்ன நடக்கும்? என்கிற கேள்விக்கு பூமி அழிந்து விடும் எனும் பதிலை தெரிவித்துள்ளனர்.

மேலும், பூமி மட்டும் அல்ல, பூமி மீது மோதியதன் விளைவாக சந்திரனும் அழிந்து போகும் என தெரிவித்துள்ளனர். விண்வெளியை பொறுத்தவரை "அழிவு" என்றால் - கிரகங்கள் அல்லது நட்சத்திரங்கள் அல்லது விண்கற்கள் ஆனது பல சிறிய துண்டுகளாக உடைந்து, பிரிந்து போகும் என்று அர்த்தம் ஆகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்