cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

கொழும்பில் யாசகர்களின் சுகபோக வாழ்க்கை; வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளாந்தம் காலை முதல் மாலை வரை யாசகம் பெறும் இவர்கள், இரவில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாகவும், நட்சத்திர தரத்திலான ஹோட்டல்களில் கூட உணவு உண்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

பிரதான வர்த்தக நிலையங்களுக்கு தேவையான இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், 100 ரூபாய் போன்ற நாணயத்தாள்களை யாசகர்களே வழங்கிவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், யாசகத்தை பிரதான தொழிலாக கொண்டு செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்