cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

தமிழர்களை கிழக்கில் படுகொலை செய்தவரே பிள்ளையான்! முன்னாள் போராளிகள் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான தமிழ் மக்கள் கடத்தல்,கொலை செய்தல்,கப்பம் பெறல், பாலியல் வன்புணர்வு, உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை செய்தவரே பிள்ளையான் தான்.

விடுதலைப் புலிகள் கருணா பிளவின்போது கருணாவின் பெயரில் பிள்ளையானே பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை செய்ததாக முன்னாள் போராளிகள் சிலர் யாழ் ஊடக அமையத்தில் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் குடியிருந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் பலர் சொத்துக்களை பறிகொடுத்து சொப்பின் பைகளுடன் மாத்திரம் ஓடியதாகவும் விடுதலைப் புலிகளின் பெயரிலும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை பிள்ளையான் தலைமையிலான தரப்பினர் செய்ததாகவும் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்