cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

சஜித்துடன் இணைந்த நால்வர் பின்வாங்கினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேட்சை உறுப்பினரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, தாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவில்லை என தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக இருந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

தான் மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பியங்கர ஜயரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, தாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், தாம் வெளிநாட்டில் இருப்பதால் இது தொடர்பில் தனக்கு எந்த உண்மையும் தெரியாது என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்னவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தான் எந்த கூட்டணியிலும் சேரவில்லை என்றும் அவர்சமூக ஊடகங்கள் வாயிலாக கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோரும் தாங்கள் ஐக்கியக் கூட்டணியில் இணையவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்