cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தீர்மானம் என்கிறார் ரணில்

75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்த்ததுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி இன்று  வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, வெளியுலகத் தலையீடுகள் இன்றி சுமுகமான முறையில் அப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அது தொடர்பான விவாதத்தை அடுத்த வாரம் நடத்த தயார் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்