cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் இங்கிலாந்து பாராளுமன்றில் விவாதம்

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் பிரித்தானியாவின் பிரதிபலிப்பு தொடர்பில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விவாதம் ஒன்றை நடத்துகின்றனர்.

எலியட் கோல்பர்ன், சாரா ஓல்னி, ஸ்டீபன் டிம்ஸ் பிரபு மற்றும் தெரசா வில்லியர்ஸ் ஆகியோர் இந்த விவாதத்தை முன்வைத்துள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வணிகக் குழு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் கூடி, எந்தவொரு விடயம் மீதும் எந்தவொரு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின்; விவாதங்களுக்கான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.
அதன்பின், தன்னிடம் உள்ள வரையறுக்கப்பட்ட நாடாளுமன்ற நேரத்தை அந்த விவாதத்துக்காக எவ்வாறு ஒதுக்குவது என்பதை அந்தக் குழு முடிவு செய்யும்.
இதன் அடிப்படையிலேயே இன்றைய விவாதம் இடம்பெறுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்