// print_r($new['title']); ?>
day, 00 month 0000

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் அணு சக்தி வளர்ச்சி

2000 களில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் வெளிப்பாடானது சமாதானமற்ற பயன்பாடுகளுக்கு இது நோக்கமாக இருக்கலாம் என்று அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டது.
 
வாஷிங்டன் சார்பான ஈரானிய அதிருப்தி குழு ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட வரையறுக்கப்படாத அணுசக்தி நடவடிக்கைகளை குற்றம் சாட்டிய பின்னர் 2003 ஆம் ஆண்டில் IAEA விசாரணை நடத்தப்பட்டது.
 
ஈரான் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக
பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு நெருங்கிவிட்டாலும், அணு சக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்கான பேச்சுவாா்த்தையில், ஈரானிடம் சில அம்சங்களை ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்திருந்தது. அதற்கு பதிலளித்து ஈரானும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டது. அதனை மேற்கத்திய நாடுகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன.
 
அதையடுத்து, அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் அரசு அந்த ஒப்பந்தத்தை முறியடித்ததால் இந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு ஏற்பட வாய்ப்பு நெருங்கவில்லை. இதன் விளைவே இன்றைய உலகின் முக்கிய விடயமாக ஈரானிய ட்ரோன் தயாரிப்பும், ரஷ்யா- ஈரான் ஆழமான உறவு பற்றி அமெரிக்கா அதீத கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
 
உக்ரேனில் ஈரா ட்ரோன் தாக்குதல் :
 
உக்ரைன் தலைநகரில் இருவாரத்திற்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய ஆளில்லா விமானங்கள் (Drones) பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கவும், உகரேனிய அரசும் தெரிவித்தன.
 
இதற்கு முன் ஈரான் ரஷ்யாவிற்கு மேற்பரப்பிலிருந்து மேற்பரப்பு ஷாஹத்-136 உள்ளிட்ட ஏவுகணை- ட்ரோன்களை வழங்கியது.
அத்துடன் ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகர காவலர்களின் இரண்டு மூத்த அதிகாரிகள் மற்றும் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரி ஆகியோர் ஆயுதங்களை வழங்குவது பற்றி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோவிற்கு வருகை தந்தபோது ஒரு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே சோல்ஃபகர் உட்பட குறுகிய தூர ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
ஈரான் வழங்க ஒப்புக்கொண்ட ட்ரோன்களில் ஒன்று ஷாஹெட்-136 ஆகும், இது டெல்டா-சிறகுகள் கொண்ட ஆயுதம் “காமிகேஸ்” ஆகாயத்திலிருந்து மேற்பரப்பு தாக்குதல் விமானமாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
ரஷ்யா-ஈரான் உறவு ;
 
ரஷ்யா-ஈரான் இடையேயான உறவு என்பது ஆழ்ந்த கொள்கை பிடிப்பு அடிப்படையிலானது என்பதை விட, சூழ்நிலைகளை சார்ந்தே அமைந்துள்ளது. சிரியா போரிலும், இஸ்ரேலுடனான ரஷ்ய உறவுகளும் ஈரான் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆயினும் தற்போதய உக்ரேனிய போரில் ரஷ்யாவிற்கு குறுகிய தூர ஏவுகணைகளை ஈரான்
வழங்குகிறது.
 
அத்துடன் Fateh-110 மற்றும் Zolfaghar ஆகியவை 300 கிமீ முதல் 700 கிமீ (186 மற்றும் 435 மைல்கள்) தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஈரானிய குறுகிய தூர மேற்பரப்பு முதல் மேற்பரப்பு வரையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும்.
 
சமீபத்திய வாரங்களில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்ய தாக்குதல்களை உக்ரைன் தலைநகர் கீவ்வில் நடாத்தியது. ஆயினும் கிரெம்ளின் அதன் படைகள் ஈரானிய ஆளில்லா விமானங்களை உக்ரேனைத் தாக்க பயன்படுத்தியதை மறுத்தது.
 
ஈரானிய ட்ரோன்களால் உக்ரேனிய அரசை அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், உக்ரேனின் மின்சாரம் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் கட்டமைப்பின் மீது தாக்குதல் தீவிரமாக நடத்தாப்பட்டது.
 
ஈரான் அணுசக்தி திட்டம் :
 
தற்போது அமெரிக்காவை அச்சுறுத்தும்
ஈரானின் அணுசக்தி திட்டம் (Nuclear program of Iran) என்பது பல ஆராய்ச்சி தளங்கள், இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணு உலை மற்றும் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளிட்ட யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவற்றை கொண்டது ஆகும்.
 
சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) சரிபார்ப்புக்கு உட்பட்டு அதன் அணுசக்தித் திட்டத்தை உருவாக்கியது. 1970 ஆம் ஆண்டில் ஈரான் அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையை ஒப்புக்கொண்டது.
 
அமெரிக்காவின் உதவியுடன் 1950 களில் சமாதான திட்டத்திற்கான அணுக்களின் பகுதியாக ஈரானின் அணுசக்தி திட்டம் பல ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில் இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணுசக்தி மற்றும் யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவை அடங்கும், இதில் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளன.
 
அமெரிக்க உதவி பெற்ற ஈரான் :
 
ஈரான் அணுசக்தி திட்டத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய அரசாங்கங்களின் பங்கு ஈரானின் ஷாவை கவிழ்த்த 1979 ஈரானிய புரட்சி வரை தொடர்ந்தது.
 
1979 புரட்சிக்குப் பின், ஈரானுடனான சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்பு மிகக் குறைக்கப்பட்டது. 1981 ல் ஈரானிய அதிகாரிகள் நாட்டின் அணுசக்தி வளர்ச்சி தொடர வேண்டும் என்று முடிவு செய்தனர். 1980 களின் பிற்பகுதியிலும், 1990 களின் முற்பகுதியில் அர்ஜென்டினாவிலும் பேச்சுவார்த்தைகள் பிரான்சுடன் நடந்தது, மேலும் உடன்பாடுகள் எட்டப்பட்டன.
 
1990 களில் ரஷ்யா ஈரானுடனான கூட்டு ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை உருவாக்கியது, ஈரான் ரஷ்ய அணு வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப தகவலுடன் ஈரானுக்கு அளித்தது.
பின்னர் 2006 இல், ஈரானின் NPT கடமைகளுடன் இணங்காததன் காரணமாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் அதன் செறிவூட்டல் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கோரியது.
 
ரஷ்ய பொறியியல் ஒப்பந்தம் :
 
2007 ஆம் ஆண்டில், 2003 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் ஈரான் ஒரு தீவிர அணு ஆயுதத் திட்டத்தை செயல்படுத்திவிட்டதாக ஐக்கிய நாடுகளின் தேசிய புலனாய்வு மதிப்பீடு அறிவித்தது.
 
நவம்பர் 2011 இல், ஐ.ஏ.ஏ.ஏ 2003 வரை ஒரு அணு குண்டு தயாரிப்பதற்காக ஈரான் சோதனைகளை நடத்தி வருவதாக நம்பகமான ஆதாரங்களை வெளியிட்டது, அந்த ஆய்வு பின்னர் அந்த நேரத்தில் ஒரு சிறிய அளவிலான ஆய்வு தொடர்ந்தது.
 
ஈரானின் முதல் அணுசக்தி ஆலை, புஷெர் 1 அணு உலை, ரஷ்ய அரசாங்க நிறுவனமான ரோசாம்மின் பிரதான உதவியுடன் நிறைவு செய்யப்பட்டு 2011 செப்டம்பர் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டின் இறுதியில் புஷெர் அணு சக்தி நிலையம் முழு திறனை அடைந்துவிடும் என்று ரஷ்ய பொறியியல் ஒப்பந்தம் ஆட்டம்நெர்கோபிராம் தெரிவித்தது.
 
2015 ஆம் ஆண்டுக்குள், ஈரான் அணுசக்தி திட்டம் இழந்த எண்ணெய் வருவாயில் $ 100 பில்லியன் செலவழித்து, சர்வதேச தடைகள் ($ 500 பில்லியன், மற்ற வாய்ப்பு செலவுகள் உட்பட) காரணமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை இழந்தது.
 
தொடர்ந்து முன்னேறிய தெஹ்ரானிய அரசு 2018ஆம் ஆண்டில் டிரம்ப் நிர்வாகத்தால் ஈரானில் அணுசக்தி தொடர்பான தடைகள் மீண்டும் அமலாக்கப்பட்டது. தொடர்ந்து பல தடைகளை தாண்டி ஈரான் புதிய 360 மெகாவாட் அணுசக்தி ஆலையில் டார்கோவினில் அமைக்கும் பணியில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளது, எதிர்காலத்தில் மேலும் நடுத்தர அணுசக்தி நிலையங்கள் மற்றும் யூரேனிய சுரங்கங்களை இது தேடுகிறது.
 
ஈரானின் அணு சக்தி வளர்ச்சியை
அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாகவும், பிராந்திய வல்லரசாக ஈரான் அணு ஆயுத பலம் பெற்றால் அமெரிக்கவின் வளைகுடா இராணுவ மேலாண்மை குறைக்கப்படும் என வாஷிங்டன் கருதுகிறது.
 
இதே வேளை ரஷ்யாவுடன் ஆழமாக கைகோர்க்கும் ஈரானின் ட்ரோன் தானியங்கி ஏவுகணை உற்பத்தியால்
ஐரோப்பிய - உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாதோ என்றும் அமெரிக்கா அஞ்சுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்