// print_r($new['title']); ?>
day, 00 month 0000

63 க்கும் 23 க்கும் காதல்; கடத்தலின்போது சிக்கினர்- முல்லையில் சம்பவம்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் திருமணமான 23 வயது பெண்ணைக் கடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி இந்தக் கடத்தல்  முயற்சி இடம்பெற்றதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காதல் விவகாரமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

23 வயதான பெண்ணுக்கு சிலமாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றது.சிறிது காலத்தினுள் குடும்பத்தினுள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.தனது மனைவிக்கு, அவரது நெருங்கிய உறவினரான 63 வயது நபருடன் காதல் இருப்பதாக தெரிவித்து கணவன் பொலிஸில் கடந்த மாதம் முறைப்பாடு செய்திருந்தார்.

63 வயது நபர் கனடாவில் வசித்து வந்த நிலையில் அண்மையில் முல்லைத்தீவுக்கு திரும்பி அங்கு வாழ்ந்து வருகின்றார்.அவருடன் இணைந்து வாழ விரும்புவதாகவே 23 வயது பெண் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் 23 வயது பெண்ணுக்கு அறிவுரை கூறி, பெண்ணை அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். பெற்றோரின் வீட்டில் கடந்த ஒரு மாத மாக அந்தப் பெண் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி இரவு 23 வயதுப் பெண்ணைக் கடத்திச் செல்ல வந்ததாகத் தெரிவித்து வாகன மொன்றை சேதமாக்கிய பெண்ணின் உறவினர்கள், வாகனச் சாரதியையும் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான வாகனச்  சாரதியும், தாக்குதல் நடத்திய பெண்ணின் சகோதரர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்