day, 00 month 0000

தாமரை கோபுர நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிப்பா?; சீனத் தூதரகம் விளக்கம்

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தியை சீன தூதரகம் மறுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம்,  

சமூக ஊடகங்களில் பரவும் நுழைவுச்சீட்டு போலியானது என்றும் அதை சமூக ஊடகங்களில் பகிரும் முன் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. எவ்வாறாயினும் தாமரை கோபுரம் குறித்த இலவச விளம்பரத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்