// print_r($new['title']); ?>
day, 00 month 0000

போருக்கு பின்னரும் வடக்கு, கிழக்கில் ஏன் இராணுவத்தை குவித்து வைத்திருக்கிறீர்கள்- விக்கி கேள்வி

போருக்கு பின்னர் ஒரு நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய நல்லிணக்க விடயங்கள் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லை,அதற்கு பதிலாக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

இலங்கையில் 3 லட்சத்து 31ஆயிரம் படை வீரர்கள் சேவையில் உள்ளனர். எனினும் பிரித்தானியாவில் 90 ஆயிரம் படையினரே உள்ளனர்.

போருக்கு பின்னர் ஒரு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய டிடிஆர் (DDR) என்ற நிராயுதபாணியாக்கல் (Disarmament), படைகளில் இருந்து விடுவிடுத்தல் (Demobilization) மற்றும் மறு ஒருங்கிணைப்பு (Reintegration) என்ற மூன்று விடயங்கள் இலங்கையில் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் முன்மொழியப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தில், மக்களின் நிவாரணங்களை காட்டிலும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு படையினர் தொடர்ந்தும் செயலில் இருப்பது இந்தியாவுக்கு, சீனாவுக்கு, அமெரிக்காவுக்கு அல்லது மாலைத்தீவுக்கு எதிராகவோ போர் செய்வதற்காக அல்ல.

மாறாக தொடர்ந்தும் வடக்கு கிழக்கின் தமிழ் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே படையினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்