// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பாதுகாப்பு வலயத்துக்குள் கொழும்பு

கொழும்பில் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.எஸ்.ஜே. சந்திரகுமார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய ட்ரோன் கமராக்கள், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

இந்த போராட்டத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்