cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

யாழ். வடமராட்சி பகுதியில் பாரிய விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில், இன்றைய தினம் அதிகாலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது -29) மற்றும் செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது-31) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

நெல்லியடி கலிகை சந்தி பகுதியில் உள்ள வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

விபத்து குறித்து நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம், A 9 வீதியின் செம்மணி வளைவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பகல் பாரிய மோட்டார் சைக்கிள் விபதொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, தம்பதியர் விபத்துக்குள்ளானதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த விபத்து,மோட்டார் சைக்கிளும், தண்ணீர் பௌசரும் நேருக்கு நேர் மோதுண்டதில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புவனேஸ்வரன் மனோஜ் (31 வயது) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்தவர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்