// print_r($new['title']); ?>
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியது தொடக்கம் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு வருகின்றார்.
டுவிட்டரை வாங்கிய உடன் முதலில் டுவிட்டரின் முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். பின்னர் ஆலோசனைக் குழுவினையும் நீக்கினார்.
அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார்.
அதில் ஆட்குறைப்பு, ‘ப்ளூடிக்’ வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய வேளையிலும் மஸ்க் அதிலிருந்து பின்வாங்கவில்லை.
இவ்வாறான சூழலில் , தற்போது நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத டுவிட்டர் கணக்குகள் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.