cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பிரான்ஸில் மாயம்

பிரான்ஸ் - பாரிஸ் பிராந்தியத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இல்து பிரான்ஸ் பிராந்தியத்தின் 7ம் இலக்க மெத்ரோவான வில்யுப் நகரில் வசித்து வந்த 41 வயதான சிவசுப்பிரமணியம் சபேசன் என்பவரையே கடந்த 20 நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போனவரின், மனைவி,பிள்ளைகள் யாழ்ப்பாணம், மல்லாகத்தில் வசித்து வரும் நிலையில், தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் மக்களிடம் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

வதிவிட விசா கிடைக்காத நிலையில், குறித்த நபர் பல தமிழ் வர்த்தக நிலையங்களில் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன நபர் இறுதியாக தான் இருந்த வீட்டு உரிமையாளருடன் முரண்பட்டுவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் எதுவும் தெரியாததால், யாழில் உள்ள மனைவியும், உறவினர்களும் பெரும் கலக்கத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.     


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்