cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வருகின்ற குரங்கு அம்மை 75 நாடுகளில் பரவி இருக்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை அறிவித்தது. 

உலக நாடுகள் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 

இதனால் உலக நாடுகள் குரங்கு அம்மை நோய் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பரவியுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நியூயோர்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்